.
Headlines News :
நாககாளி அம்மன்  இணையத்தளத்திற்கு அன்புடன் வரவேற்கின்றோம்
நாககாளி அம்மன்  இணையத்தளத்திற்கு அன்புடன் வரவேற்கின்றோம் Contact நாககாளி அம்மன்  இணையத்தளத்திற்கு அன்புடன் வரவேற்கின்றோம்
தொழில்நுட்ப செய்திகள்

ஏம்மா வீட்ல சாப்பாடு தரலையாடா செல்லம்? (படங்கள் இணைப்பு)

இந்தியாவில் வறிய விவசாய குடும்பம் ஒன்றைச் சேர்ந்த ஒரு வயதுப் பெண்.. மேலும் »

February
February
மேலும் செய்திகள் »»
மருத்துவச் செய்திகள்

தேமல் மற்றும் கிருமிகளில் இருந்து பாதுகாக்க தோல் நோய் குணமாக..

சுட்டெரிக்கும் நெருப்புடன் விளையாடுவதையும் ஒரு பஷனாக ... மேலும் »

February
February
மேலும் செய்திகள் »»
வினோதங்கள்

இன்னும் இடம் இருக்கு நீங்களும் வாரீங்களா? (படங்கள், வீடியோ இணைப்பு)

இந்த வினோத பயணத்தைப் பார்க்கும்போது ஏண்டா கார், பஸ் எல்லாம்... மேலும் »

February
February
மேலும் செய்திகள் »»

அமெரிக்க தீர்மானத்திற்கு புலம்பெயர் தமிழர்களும் எதிர்ப்பு

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்ட இலங்கை தொடர் பான தீர்மான நகல் வரைபானது அமெரிக்க அரசாங்கத்தின் மேலும் »

Contact

Latest Post

இதுவரை இல்லாத அளவுக்கு கவர்ச்சி காட்டியிருக்கும் அஞ்சலி !

Written By K.Siva on Monday, April 9, 2012 | 3:47 AM

சென்னை, ஏப்.4 (டிஎன்எஸ்) இயக்குநர் சுந்தர்.சி படங்கள் என்றாலே காமெடியும், கவர்ச்சியும் தான் என்பது தமிழ் சினிமா ரசிகரகள் அறிந்ததுதான். ஹீரோவாக நடித்து வந்த சுந்தர்.சி, தற்போது மீண்டும் இயக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்.

சுந்தர்.சி நடிக்காமல், விமல், மிர்ச்சி சிவா, அஞ்சலி, ஓவியா, சந்தானம் ஆகியோரை வைத்து 'மசாலா காஃபே' என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தை யூடிவி நிறுவனம் தயாரிக்கிறது.

தமன்னா அழகை அப்பட்டமாக காட்டும் அருவிக்குவியல்!

மாவீரன்ல பட்டைய கிளப்புனாருல்ல ராம்சரண்.. ஆமா.. சிரஞ்சீவியோட புள்ள.. அவரு நடிச்சு சூப்பர்குட் பிலிம்ஸ் ஆர்.பி.சவுத்ரி தயாரிச்சிருக்கிற படம் ரகளை.. அப்படின்னா ஒரு எதிர்பார்ப்பு இருக்கத்தானே செய்யும்..நாமும் எதிர்பார்ப்போடுதான் ரகளைய பார்க்கப் போனோம்..

தூங்கி எந்திரிச்சவுடனயே ஒரு ஃப்ரஷ்னஸ் இருக்கும்ல.. அப்படி ஒரு ஃப்ரஷ்னஸ் எப்பவும் இருக்கு ராம்சரண் முகத்துல.. ஆனா.. வீரதீர காட்சிகளிலும் கூட சோகம் அப்பியிருக்கிற மாதிரியே முகபாவனை காட்டுறாரு.. சுறுசுறுப்புலயோ ஆட்டபாட்டத்துலயோ அவரு குறை வைக்கல. யூத்துகளுக்கு பிடிக்கிற மாதிரி ரொம்பவும் ஸ்டைலிஷாகத்தான் படம் முழுக்க வர்றாரு.. சண்டைக் காட்சிகள்லயும் தூள் கிளப்புறாரு.

தமன்னாவோட இயல்பான அழகை ஒரே ஒரு அருவிக் குளியல் காட்சியில மட்டும்தான் பார்க்க முடியுது.. மத்தபடி படம் முழுக்க ஒப்பனை முகம்தான். ஒரு பாடல் காட்சியில இடுப்புக்கு மேல அம்புட்டும் பளிச்சுன்னு தெரியற மாதிரி வர்றாரு.. இடுப்பை மட்டுமல்ல உடம்பயும் வில்லா வளைச்சு அந்த ஆட்டம் போடறாரு.

நம்ம பார்த்திபன், நாசர், அஜ்மல்ன்னு இவங்களும் வந்து போறாங்க. வில்லன் கோட்டா சீனிவாசராவின் பாத்திரமும் கூட பேசும் அளவுக்கு இல்லை. இதுக்கு மேல பாலிவுட் வில்லன்கள் அஞ்சு பேரு வேற எப்பப் பார்த்தாலும் உறுமிக்கிட்டே இருக்காங்க.

மணிசர்மா மியூசிக் போட்ருக்காரு.. ஒண்ணு ரெண்டு பாடல் ஓ.கே.. மத்தபடி பெரிசா சொல்லிக்கிர்ற மாதிரி இல்ல.. சமீரோட கேமராவுக்கு நல்ல தீனி.. இங்கே பொள்ளாச்சி, ஹைதராபாத், கோவான்னு ஆரம்பிச்சு.. பாங்காக், சுவிட்சர்லாந்து, மலேசியா, சீனாவுல உள்ள மூங்கில்காடு வரைக்கும் காட்சிகளை அள்ளிக் கொண்டு வந்து திரையில கொட்டியிருக்கு.

பத்து நிமிஷத்துக்கு ஒரு பாட்டு வந்தே ஆகணும். அதுவும் ஸ்பீட் டான்ஸா இருந்தாகணும்கிறதுல இருந்து இந்தத் தெலுங்கு சினிமாக்காரங்க மாறவே மாட்டாங்க போல. ரகளையும் அந்த ரகம்தான். தெலுங்குலயும், தமிழ்லயும் எடுத்தாலும் தெலுங்கு நெடியே தூக்கலா இருக்கு. மாவீரன் பாப்புலாரிட்டிய வச்சே படத்த ஓட்டிடலாம்கிற நம்பிக்கையில 40 கோடிய இரைச்சிருக்காராம் சவுத்ரி.

இந்தியாவுல எந்தப் படத்துக்கும் இந்த அளவுக்கு வால் போஸ்டர் அடிச்சதில்லையாம்.. முதல் கட்டவால் போஸ்டர் செலவு மட்டுமே 70 லட்ச ரூபாயாம். காட்சிக்கு காட்சி பிரம்மாண்டம் காட்டினா போதுமா? மனசுல ஒட்டணுமே..? எப்படி எடுத்தாலும் மசாலா படம் ஓடும்கிற நம்பிக்கை ரொம்பவே இருக்கும் போல இந்த ரகளை யூனிட்டுக்கு.

சின்ன வயசுல பிரிஞ்சு வளர்ந்த பிறகு ஒண்ணு சேர்ற கதாபாத்திரங்கள்.. உச் கொட்ட வைக்கணும்னு வலிய திணிக்கிற ஃப்ளாஷ் பேக்.. தெலுங்கு சினிமாக்களில் இடம் பெறும் காளி கோயில்ன்னு வழக்கமான எல்லா சங்கதிகளும் இதிலும் உண்டு.

ஆமா.. கதை.. திரைக்கதை..? எந்தப் பக்கமும் இழுக்க முடிகிற ஒரு ரப்பர் கதையை வைத்துக் கொண்டு மனம் போன போக்கில் இழுத்திருக்கிறார்கள். இயக்குனர் சம்பத்தாம்.. டைரக்டர் சார்.. அடுத்தாச்சும் உருப்படியா யோசிச்சு ஒரு நல்ல படம் பண்ணுங்க..

படம் முடிஞ்சு வெளிய வர்றப்ப, இதே மாதிரி மசாலா படங்கள எத்தனையோ தடவ பார்த்தாச்சேங்கிற சலிப்பும் சேர்ந்து வருது. ரணவேதனை என்று ஒரேயடியாக ஒதுக்கிவிட முடியாது என்றாலும்.. ரகளை ஏனோ களை கட்டவில்லை.!

3 படத்தைப் பார்த்து மகள் ஸ்ருதியைப் பாராட்டிய தாய்!

3 படத்தை பார்த்துவிட்டு எனது தாயார் சரிகா என்னை வெகுவாக பாராட்டினார் என்று நடிகை ஸ்ருதிஹாசன் கூறியுள்ளார்.இதுகுறித்து ஸ்ருதிஹாசன் கூறியதாவது, தமிழ் தவிர பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறேன். எனினும் அதிகமாக பேசப்படும் படம் 3 ஆகும்.

எனது கதாபாத்திரமும், நடிப்பும் பலராலும் பாராட்டப்படுகிறது. நான் நடிக்கும் படம் வெளியாகும் போது எனது நெருங்கிய நண்பர்கள் இருவரிடமும், எனது பெற்றோரிடமும் அந்த படத்தை பற்றிய அவர்களது கருத்தை கேட்பேன்.

எனது தந்தை ஒரு நடிகர் என்ற முறையில் அவரின் கருத்தையும் கேட்பேன். ரொம்ப பிடித்திருப்பதாக அவர் சொல்வார். நான் சந்தோஷப்படுவேன்.

உண்மையிலேயே அவருடைய மகள் என்பதற்காக என்னை அவர் பாராட்ட மாட்டார். விமர்சிப்பதில் அவர் பாரபட்சம் காட்ட மாட்டார். அவர் விமர்சனம் வெளிப்படையாகவும், நேர்மையாகவும் இருக்கும்.

அவரது விமர்சனம் எனது வளர்ச்சிக்கு உதவியாக இருக்கிறது. அவர் ஒருபோதும் அறிவுரை கூறுவது கிடையாது. ஆலோசனைகளை மட்டுமே வழங்குவார்.

சினிமாவில் நடிக்கும் போது, அந்த பாத்திரமாகவே மாறிவிட வேண்டும். பிற பாத்திரங்களுடன் ஒப்பிட்டு பார்க்க கூடாது என்பார். அவரது இந்த பாடமே, சினிமாவில் நான் வெற்றி பெற வழிகாட்டியாக இருக்கிறது.

3 படத்தின் இந்தி மொழி பதிப்பை பார்த்து விட்ட எனது தாயார் சரிகா, என் நடிப்பை பாராட்டினார். நான் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் அந்த பாத்திரமாகவே நான் மாறி விடுவேன். 3 படத்தில் வரும் அழுகை காட்சி கூட, சினிமாவுக்காக ஒப்புக்காக அழவில்லை. அந்த பாத்திரத்தின் வலியை உணர்ந்து அழுதேன்.

3 படத்துக்கு பிறகு நான் நடித்து வரும் படம் �கபால் சிங்�, �தபாங்� படத்தின் தெலுங்கு ரீமேக் ஆகும். கதாநாயகள் பவன் கல்யாண், கிட்டத்தட்ட முடியும் தருவாயில் உள்ளது.

எனக்கு சந்தோஷமான அனுபவத்தை இந்த படம் தந்தது. நான் எந்த மொழியில் நடித்தாலும், அந்த கதாபாத்திரத்திற்கு தகுந்தவாறு என்னை மாற்றிக் கொள்வேன்.

கிராமப் பெண் வேடம் எனக்கு சவாலாக அமைந்திருந்தது. அதையும் சிறப்பாக செய்தேன். நான் சிறு வயது முதலே கவிதைகள் எழுதி வருகிறேன்.

விரைவில் இவற்றுக்கு இசை வடிவம் கொடுக்க விரும்புகிறேன். எனக்கு இசையும் ரொம்ப பிடிக்கும். முறைப்படி இசை கற்றிருக்கிறேன், சமயம் வரும் போது இசை அமைப்பேன். எனது பாடலையும் சினிமாவில் பயன்படுத்துவேன் என்று தெரிவித்தார்.

ஜலதோஷத்தை விரட்டும் தும்பைப் பூ!

Written By K.Siva on Sunday, April 8, 2012 | 11:03 PM

மழைக்காலத்தில் சர்வ சாதாரணமாக ஜலதோஷதம் பிடித்துக்கொள்ளும். அதனை விரட்ட வீட்டிலேயே செய்யக் கூடிய எளிய மருந்து கஷாயம்தான். அதும் தும்பை பூவை பாலில் போட்டு காய்ச்சி குடிக்கனும்னா சொல்லவா வேனும்.. ஜலதோஷதம் நம்மள விட்டே ஓடிப்போகும். செய்துதான் பாருங்களேன். அப்புறம் சொல்லுவீங்க பாட்டியோட வைத்தியத்தப்பத்தி.....

தும்பைப் பூ
 
தும்பைப் பூவை அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. தும்பையின் பூவை பாலில் போட்டுக் காய்ச்சிச் சாப்பிட்டால் ஜலதோஷம் பறந்தோடி விடும். தும்பைப் பூவைச் சுமார் இருபதிலிருந்து இருபத்தைந்து கிராம் வரை எடுத்துக் கொண்டு நல்லெண்ணையில் காய்ச்சித் தலைக்குத் தேய்த்துக் குளித்தால் தலைவலி பட்டென்று விட்டுவிடும்.

அத்திக்காய்

அத்திக்காய், இதனையிடித்து விதையை மட்டும் போக்கி, நன்றாக அலம்பி என்றால் சத்து போகின்ற வரை அலம்புவது அல்ல, ஒரே தடவை அலம்பி,   துவரை அல்லது பாசிப் பருப்பைச் சேர்த்துக் கூட்டு அல்லது பொரியல் செய்து சாப்பிட வேண்டும். இது வயிற்றுப் புண்ணை ஆற்றுகிறது. கண்ணுக்குக் குளிர்ச்சியைக் கொடுக்கிறது கஷ்டமான மலர்ச்சிக்கலைப் போக்குகிறது. பற்களுக்குப் பலம் உண்டாக்குகிறது. இதில் இரும்பு சத்து அதிகமாக இருக்கிறது. 

அக்கரகாரம்
 
மலைப்பாங்கான இடங்களில் தரையில் படர்ந்து வளரும் சிறு செடியினம். இதன் வேர் மருத்துவப் பயனுடையது. உலர்ந்த வேர் நாட்டுமருந்துக் கடைகளில் கிடைக்கும். தொண்டையில் நோய்த்தொற்று மூச்சுக்குழல் தொடர்பான நோய்களுக்குச் சிறந்த மருந்து. உமிழ்நீர்ப் பெருக்குதல், பட்ட இடத்தில் எரிச்சலூட்டுதல், நாடி நடையை மிகுத்து வெப்ப மிகுத்தல் ஆகிய மருத்துவப் பண்புகளை உடையது.

1. ஒரு துண்டு வேரை மெதுவாக நீண்ட நேரம் மென்று விழுங்க பல்வலி, அண்ணாக்குத் தூறு அழற்சி, தொண்டைக் கம்மல், நாக்கு அசைக்கமுடியாமை, நீர்வேட்கை ஆகியவை தீரும்.
2. உலர்ந்த வேரைப் பொடியாக்கி நாசியில் உறிஞ்ச வலிப்பினால் ஏற்பட்ட நரம்புப் பிடிப்பு தீரும்.
3. 30 கிராம் வேர்ப் பொடியை 1 லிட்டர் நீரிலிட்டு 250 மி.லி ஆகும் வரைக் காய்ச்சி வடிகட்டி நாள்தோறும் 3 வேளை வாய்கொப்பளித்து வர பல்வலி நீங்கிப் பல்லாட்டம் குறையும். வாய் தொண்டை ஆகியவற்றில் உள்ள புண்கள் ஆறும்.
 
மிளகு
 
இதனைப் பெரும்பாலும் சமையலில் சேர்க்காதவர்களே இருக்க மாட்டார்கள். இந்த மிளகை இடித்துத் துணியினால் சலித்து, நாள் தோறும் மூன்று சிட்டிகை வீதம், வெண்ணெயில் குழைத்துச் சாப்பிட்டு வந்தால் இளநரை வராமல் தடுக்கும். வாரத்திற்கு ஒரு முறை மிளகுக் குழம்பு வைத்துச் சாப்பிட்டு வந்தால் கீல் வாயு நோய் குணமாகும்.

தோல் நோய் குணமாக..

 வீட்டில் எளிதாய் கிடைக்கும் உணவுப் பொருட்களை வைத்து

ஆரோக்கியமாக வாழ பழகிக்கொள்ளுங்கள்.
கொண்டைக் கடலை சுண்டல் ஒரு கப் மற்றும் 100 கிராம் தேங்காய் சாப்பிட்டு வந்தால் துத்தநாக உப்பு பெற முடியும். இது நமது கை நகங்களையும், தோலையும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் என்று கூறப்படுகிறது.
அதேபோல் பூசணிக்காயில் உள்ள வைட்டமின் ஏ புற்று நோய் வராமல் 70 சதவீதம் பாதுகாப்பளிக்கிறது. சிறநீரக கற்கள் ஏற்படாமல் தடுக்கும் வல்லமையும் பூசணிக்காய்க்கு உண்டு.
வாழைப்பழத்தின் மருத்துவ குணம்...
எளிதில் கிடைக்கும் பழ வகைகளில் ஒன்று வாழைப்பழம். மருத்துவ குணம் நிறைந்த பழமாக வாழைப்பழம் திகழ்கிறது. ஆப்பிளில் உள்ளதை விட 4 மடங்கு கார்போ ஹைடிரேட்டும், 3 மடங்கு பாஸ்பரசும், 5 மடங்கு வைட்டமின் ஏ வும் மற்றும் இரும்புச் சத்தும் இதில் நிறைந்துள்ளன. ரத்தக் கொதிப்பை கட்டுப்படுத்தும் உப்பான பொட்டாஷியம் வாழைப்பழத்தில் ஏராளமாக அடங்கி உள்ளது. உடனடி உற்சாகத்தையும் பயனையும் தரக்கூடியது இப்பழம்.
உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை உறுதிப்படுத்தி தொடர்ச்சியாக காய்ச்சலில் படுப்பதை தடுக்கும் ஆற்றல் வாழைப்பழத்திற்கு உண்டு. வாழைப்பழத்தில் உள்ள இரும்புச்சத்து ரத்த சோகையையும், பொட்டாசியம் ஸ்ட்ரோக்கையும் தவிர்க்கும் வல்லமை பெற்றுள்ளது.
வாழைப்பழம் ஞாபக சக்தி, மூளையின் சக்தி அதிகரிப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல் மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கும் ஆற்றலும் இவற்றிற்கு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

ஏலக்காயில் இவ்ளோ இருக்கா?

ஏலக்காயில் காணப்படும் எளிதில் ஆவியாகும் எண்ணெய்களான போர்னியோல், கேம்பர், பைனின், ஹீயமுலீன், கெரியோ பில்லென், கார்வோன், யூகேலிப்டோல், டெர்பினின், சேபினின் ஆகியவற்றின் காரணமாக அதில் அரிய மருத்துவ குணங்கள் நிரம்பி உள்ளன. அவை...

* குழந்தைகளுக்கு வாந்தி ஏற்பட்டால் இரண்டு ஏலக்காய்களை பொடியாக்கி, அந்தப் பொடியை தேனில் குழைத்து குழந்தையின் நாக்கில் மூன்று வேளை தடவினாலே போதும். வாந்தி உடனே நின்று விடும்.
* ஜலதோஷத்தால் பாதிக்கப்பட்டு மூக்கடைப்பில் அவதிப்படும் குழந்தைகளுக்கும் ஏலக்காய் தகுந்த நிவாரணம் தருகிறது. நான்கைந்து ஏலக்காய்களை நெருப்பில் போட்டு, அந்தப் புகையை குழந்தைகள் சுவாசித்தாலே மூக்கடைப்பு உடனே திறந்து கொள்ளும்.
* மன அழுத்தப் பிரச்சினை உள்ளவர்கள், 'ஏலக்காய் டீ' குடித்தால் இயல்பு நிலைக்கு வருவார்கள். டீத் தூள் குறைவாகவும், ஏலக்காய் அதிகமாகவும் சேர்த்து டீ தயாரிக்கும்போது வெளிவரும் இனிமையான நறுமணத்தை நுகர்வதாலும், அந்த டீயைக் குடிப்பதால் ஏற்படும் புத்துணர்வை அனுபவிப்பதாலும் மன அழுத்தம் சட்டென்று குறைகிறது.

* நா வறட்சி, வாயில் உமிழ்நீர் ஊறுதல், வெயிலில் அதிகம் வியர்ப்பதால் ஏற்படும் தலைவலி, வாந்தி, குமட்டல், நீர்ச்சுருக்கு, மார்புச்சளி, செரிமானக் கோளாறு ஆகிய பிரச்சினைகளுக்கு ஏலக்காயை வாயில் போட்டு மென்றாலே நிவாரணம் பெற முடியும். அதேநேரம், ஏலக்காயை அதிகமாக, அடிக்கடி வாயில் போட்டு மெல்லுவது நல்லதல்ல.
* வெயிலில் அதிகம் அலைந்தால் தலைசுற்றல், மயக்கம் ஏற்படும். இதற்கு நான்கைந்து ஏலக்காய்களை நசுக்கி, அரை டம்ளர் தண்ணீரில் போட்டு, கஷாயமாகக் காய்ச்சி, அதில் சிறிது பனை வெல்லம் போட்டு குடித்தால் தலைசுற்றல் உடனே நீங்கும். மயக்கமும் மாயமாய் மறைந்துவிடும்.

* விக்கலால் அவதிப்படுவோர் இரண்டு ஏலக்காய்களை நசுக்கி, அத்துடன் நான்கைந்து புதினா இலைகளைப் போட்டு, அரை டம்ளர் தண்ணீரில் நன்கு காய்ச்சி வடிகட்டி, மிதமான சூட்டில் இந்தக் கஷாயத்தைக் குடித்தாலே போதும்.

* வாய்வுத் தொல்லையால் அவதிப்படுவோர் ஏலக்காயை நன்கு காய வைத்து பொடியாக்கி, அந்தப் பொடியில் அரை டீஸ்பூன் எடுத்து, அரை டம்ளர் தண்ணீரில் கொதிக்கவிட வேண்டும். உணவு உட்கொள்வதற்கு முன்பாக, இந்த ஏலக்காய் தண்ணீரைக் குடித்தால் வாய்வுத் தொல்லை உடனே நீங்கிவிடும்.

Isaiaruvi music channel live



puthiyathalaimurai tv live channel





Vijay TV channels live






1 | 2 | 3 | 4 | 5 | 6 | Next » ?max-results=10">Label 1'); document.write(" 1 | 2 | 3 | 4 | 5 | 6 | Next » ?max-results="+numposts2+"&orderby=published&alt=json-in-script&callback=showrecentposts2\"><\/script>");
?max-results=10">Label 2'); document.write(" ?max-results="+numposts2+"&orderby=published&alt=json-in-script&callback=showrecentposts2\"><\/script>");

அமெரிக்க தீர்மானத்திற்கு புலம்பெயர் தமிழர்களும் எதிர்ப்பு

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்ட இலங்கை தொடர் பான தீர்மான நகல் வரைபானது அமெரிக்க அரசாங்கத்தின் மேலும் »

சன் கிளாஸ் வாங்கப்போறீங்களா? கவனம் !

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்ட இலங்கை தொடர் பான தீர்மான நகல் வரைபானது அமெரிக்க அரசாங்கத்தின் மேலும் »

>>> மேலும் செய்திகள் » ">See all post'); document.write('

table { border-collapse:collapse; } table, td, th { border:1px solid silver; }

அமெரிக்க தீர்மானத்திற்கு புலம்பெயர் தமிழர்களும் எதிர்ப்பு

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்ட இலங்கை தொடர் பான தீர்மான நகல் வரைபானது அமெரிக்க அரசாங்கத்தின் மேலும் »

சன் கிளாஸ் வாங்கப்போறீங்களா? கவனம் !

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்ட இலங்கை தொடர் பான தீர்மான நகல் வரைபானது அமெரிக்க அரசாங்கத்தின் மேலும் »

>>> மேலும் செய்திகள் »
?max-results=10">Label 8

'); document.write("

அமெரிக்க தீர்மானத்திற்கு புலம்பெயர் தமிழர்களும் எதிர்ப்பு

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்ட இலங்கை தொடர் பான தீர்மான நகல் வரைபானது அமெரிக்க அரசாங்கத்தின் மேலும் »

சன் கிளாஸ் வாங்கப்போறீங்களா? கவனம் !

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்ட இலங்கை தொடர் பான தீர்மான நகல் வரைபானது அமெரிக்க அரசாங்கத்தின் மேலும் »

>>> மேலும் செய்திகள் » ?max-results="+numposts6+"&orderby=published&alt=json-in-script&callback=showrecentposts7\"><\/script>");