இந்தியாவில் வறிய விவசாய குடும்பம் ஒன்றைச் சேர்ந்த ஒரு வயதுப் பெண் குழந்தை ஒன்றின் விளையாட்டுப் பொருட்களாக உயிருள்ள பயங்கரமான பாம்புகள் உள்ளன.
வீட்டின் வறுமை நிலை காரணமாக குழந்தைக்கு விளையாட்டுப் பொருட்களை வாங்கிக் கொடுக்க தகப்பனிடம் பணம் இல்லை. எனவே பாம்புகளை உயிருடன் பிடித்து வந்து மகளிடம் விளையாடக் கொடுக்கின்றார் இத்தகப்பன்.
தகப்பனும், தாயும் வேலை செய்யும் நேரங்களில் பாம்புகளுடன்தான் சிறுமியின் பொழுது கழியும். பாம்புகளுடன் விளையாடுகின்றமை சிறுமிக்கு அலாதிப் பிரியம்.
விளையாட்டுப் பொருட்களின் விலைகள் அதிகம்தான், அதற்காக உயிரைக் குடிக்கக் கூடிய பாம்புகளுடன் குழந்தைக்கு சகவாசத்தை ஏற்படுத்திக் கொடுக்கின்றமை எவ்வகையில் நியாயம்? என்று ஏராளமான விமர்சனங்கள் எழுந்து உள்ளன.



0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !